Nooran sister Tamil songs | நூரன் சகோதரிகள் பாடியுள்ள தமிழ் பாடல்கள்

KrishSel All in All

Nooran sister Tamil songs | நூரன் சகோதரிகள் பாடியுள்ள தமிழ் பாடல்கள்

Nooran sister Tamil Songs
Nooran Sister

நூரன் சகோதரிகள் (ஜோதி நூரன் மற்றும் சுல்தானா நூரன்) - இவர்கள் இந்தியாவின் ஜலந்தரைச் சேர்ந்த ஒரு சூபி இசை பாடும் இரட்டையர்கள் ஆவர்.

இவர்கள் ஷாம் சௌராசியா கரானா பாரம்பரிய இசை மற்றும் “மிராசி” இசை மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்.

இவர்களின் தந்தை உஸ்தாத் குல்ஷன் மீர், பிரபல மறைந்த உஸ்தாத் சோஹன் லாலின் மகனாவார். இவர்களின் தந்தை இவர்களின் ஆசிரியர் மற்றும் குரு மட்டுமல்ல; அவர் தனியே இசையமைக்கிறார்.

இவர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை அவர் செய்கிறார். சில நேரங்களில் அவர் இவர்களுடன் சேர்ந்து பாடுகிறார்.

நூரன் சகோதரிகளின் கலை திறமை:

நூரன் சிஸ்டர்ஸ் சமீபகாலமாக (Troll) மீம்ஸ்  கிரியேட்டர்ஸ் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்று உள்ளார்கள். ஆனால் அவர்களை மோசமாக கலாய்தது மட்டுமே இவர்கள் வீடியோ பதிவு செய்து வருகிறார்கள்.

நூரன் சிஸ்டர்ஸ் அவர்களின் திறமையை மிகவும் சாதாரணமானது அல்ல. பல படங்களில் அவர்கள் பாடி உள்ளார்கள்.

 ஒரு கலையை புரிந்து கொள்ளாதவர்கள் மட்டுமே இதுபோல் தேவையில்லாத மீம்ஸ்  போட்டு கலாய்த்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். கண்டிப்பாக பலர் தங்களுடைய யூடியூப் சேனலுக்கு அதிகமான Views வேண்டும் என்பதற்காக மட்டுமே இவர்களை வைத்து மீம்ஸ் வீடியோ உருவாக்கி வருகிறார்கள்.

ஆனால் அருளின் திறமைக்கு இவர்கள் எந்தவித அங்கீகாரம் கொடுத்ததாக தெரியவில்லை.

மீம்ஸ்  கிரியட்டர்களுக்கு வேண்டுமானால் இவர்களின் திறமை தெரியாமல் இருக்கலாம். ஆனால் திரையுலகில் இசையமைப்பாளர்கள்,மக்களுக்கும் தெரியாமல் இல்லை. எனவே தான் இவர்களுக்கு அந்த அளவிற்கான ஒரு பேரும்,புகழும் பெற்று இருக்கிறார்கள். 

பல படங்களில் அவர் பாடல் பாடியிரக்கிறார்கள் தமிழ் திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

நூரன் சகோதரிகள் வாங்கியுள்ள விருதுகள்:

•சிறந்த பெண் பாடகருக்கான மிர்ச்சி இசை விருதுகள் 

•கிமா விருதுகள் 2015

•ஸ்கிரீன் விருதுகள்

•"ஹைவே" படத்தில் "படகா குட்டி" பாடல் - விருது

•"கிஸ்ஸா பஞ்சாப்" படத்தில் -"ஜிந்தே மரியே" பாடல் - விருது

நூரன் சகோதரிகளின் தமிழ் பாடல்கள்:

போகன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்
பாயும் புலி,
ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார்கள்.

•போகன் படத்தில் "கூடுவிட்டு கூடு பாய்ஞ்சா" என்ற பாடல் பாடியுள்ளார்.
•பாயும் புலி படத்தில் "சூடான மோகினி" பாடலை பாடியது இந்த நூரன் சகோதிரி (ஜோதி) என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஆனால் அந்த பாடலை நிறைய பேர் கவர்ந்த பாடலாக இருக்கும்.

இவர்களின் மொழி வேறாக இருந்தாலும் தமிழில் அழகாக இந்த பாடல்களை பாடி இருக்கிறார்கள்.

இவர்கள் பாராட்டுக்குறிய  கலைஞர்களே தவிர கலாய்த்து சிரிப்பற்கானவர்கள் அல்ல. 

நமது நாட்டுபுற கலைஞர்களை மதித்தால் மற்ற கலைகளையும், கலைஞர்களையும் கண்டிப்பாக மதிப்போம். 


Tags