Cooking Tips in Tamil Trending Samayal
இல்லத்தரசிகள் அன்றாடம் கிச்சனில் சமையல் செய்யும் போது இந்த சமையல் குறிப்புகளையும் தெரிஞ்சு வச்சிக்கோங்க நிச்சயம் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்:
![]() |
Cooking Tips in Tamil |
சமையல் டிப்ஸ் & ட்ரிக்ஸ்:
1) குழம்பு வகைகளில் காரம் அதிகமானால் எப்படி சரிசெய்வது?
நம்ம வீடுகளில் அதிகமாக காரக்குழம்பு, புளி குழம்பு வகைகள் செய்வோம், என்னதான் பாத்து பாத்து கவனமா செஞ்சாலும் காரம் கொஞ்சம் அதிகமாய்டும் அதுக்கு வீட்டில் இருக்க வெல்லம் சிறிதளவு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் காரம் குறைந்து, ருசியும் கூடும்.
2) சப்பாத்தி மிருதுவாக வேண்டுமா?
நம்ம சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிதளவு பாலும், சர்க்கரையும் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
3) சாம்பார் பருப்பு பஞ்சு போல வேக வைக்க வேண்டுமா?
குக்கரில் பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வேக வைத்தால் பஞ்சு போல பருப்பு வெந்து வரும்.
4) பொரித்த அப்பளம் நவுத்து போகாமல் இருக்க வேண்டுமா?
பொரித்த அப்பளம் மீதி ஆகி விட்டால் ஒரு டைட்டான டப்பாவில் போட்டு fridge ல் வைத்து விட்டால் சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.
5) பொரியல் மீதமாகி விட்டதா? இத பண்ணுங்க
காலையில் செய்ற பொரியல் வகைகள் மீதம் ஆகி விட்டால் அதில் ரெண்டு முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் போட்டு பாருங்கள் ருசி அருமையாக இருக்கும்.
6) இட்லி, தோசை மாவு புளிப்பு ஏறாமல் இருக்க வேண்டுமா?
இட்லி, தோசைக்கு நம்ம எப்படித்தான் மாவு அரைச்சு வச்சாலும் இந்த வெயிலுக்கு சீக்கிரம் புளிப்பு ஏறி விடும் அதுக்கு மாவு அரைக்கும் போது சில ஐஸ் கட்டிகளை சேர்த்து மாவு சூடு ஆகாமல் அரைத்து எடுத்தால் சீக்கிரம் புளிப்பு ஆகாமல் இருக்கும்.
7) வித்தியாசமான, சுவையான டிப்பன் செய்ய:
எப்போதும் ஒரே மாதிரி இட்லி, தோசை, பூரி, செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து பாருங்கள்;
ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரை இலைகளை கழுவி எடுத்து கொண்டு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதளவு சீரகம், காய்ந்த மிளகாய், ஒரு வெங்காயம் நறுக்கி சேர்த்து வதக்கவும் பின்பு முருங்கை கீரையை சேர்த்து வதக்கவும்,
பின்பு ஆறியதும் சிறிது உப்பு தேங்காய் துருவல் 2 ஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து தோசை மாவில் கலந்து சிறு சிறு தோசைகளாக ஊற்றி எடுத்து கார சட்னி வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
8) குக்கரில் சாதம் வைக்கும் போது உதிரி உதிரியாக வருவதற்கு:
குக்கரில் சாதம் வைக்கும் போது உதிரி உதிரியாக வருவதற்கு அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ் கட்டிகளை சேர்த்து ஊற வைத்து சமைத்தால் சாதம் வெள்ளையாகவும் உதிரி உதிரியாகவும் வரும்.
9) சாம்பார் நல்ல கலரா வர இத செய்யுங்கள்:
நம்ம வைக்கிற சாம்பார் நல்ல கலரா வரணும்னா நல்ல பழுத்த தக்காளி பழம் 2 எடுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும் பின்பு சாம்பார் தாளிக்கும் போது தக்காளி விழுதையும் சேர்த்து தாளித்து சாம்பார் வைத்து பாருங்கள் சுவையும் ,கலரும் அருமையாக இருக்கும்.
10) பொரியல் அடி பிடித்தால் எப்படி சரிசெய்வது:
சில நேரங்களில் நம்ம செய்ற பொரியல் அடி பிடிக்கும் போது உடனே கரண்டி வைத்து கிளராமல் உடனே 2 ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து கொடுத்தால் அடி பிடித்தது உடனே சரியாகும்.
Read More: உணவில் உப்பு அதிகமானால் எப்படி சரிசெய்வது?
இந்த டிப்ஸ் அனைத்தும் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கும் மற்றும் மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
இது போன்ற மேலும் சமையல் டிப்ஸ் நமது தளத்தில் தொடர்ந்து வர இருக்கிறது.
கீழே உங்கள் கருத்துக்களை கமெண்டில் தெரியப்படுத்தலாம்.