SBI Customers ALERT!Attach Aadhar and Ban Card before June-30 | SBI Bank has been alerting Their customers
எஸ்.பி.ஐ வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் அடையாள (Aadhaar Card) அட்டையுடன் உங்களின் (PAN Card) பான் கார்டுகளை இணைக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்துள்ளது.
அதில்:
[எந்தவொரு சிரமத்தையும் தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பான் ஆதார் உடன் இணைக்க அறிவுறுத்துகிறோம்.]
![]() |
SBI Bank Recent Tweet |
ஆதார அடையாள அட்டையுடன் பான் கார்டுகளை இணைத்து பிரச்சனையற்ற வங்கி சேவைகளை தொடருமாறு எங்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக் கொள்கின்றோம் என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது முக்கியமான ஒன்றாகும்.
அவ்வாறு செய்யவில்லை என்றால் PAN CARD -ஐ தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
அதனால் குறிப்பிட்ட வங்கி சேவைகளை பெற PAN CARD -ஐ பயன்படுத்த முடியாத நிலை வாடிக்கையாளார்களுக்கு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு இதனை தெரிவித்துள்ளது அந்த வங்கி.
பான் கார்டுடன் ஆதாரை நீங்கள் இணைக்க விரும்பினால் incometaxindiaefiling.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
பிறகு Link Aadhaar என்று இடதுபுறம் குறிப்பிடப்பட்டிருக்கும் பேனிற்கு செல்லவும்.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது எப்படி?
* incometaxindiaefiling.gov.in என்ற இணையத்தில் Login செய்யவும்
*உங்களின் பான் அட்டை எண் தான் உங்களின் யூசர் ஐடியாக இருக்கும்
*யூசர் ஐடி கொடுத்த பிறகு ஆன்லைனில் உங்களின் Password மற்றும் (DOB) பிறந்த தேதியை பதிவு செய்யவும்.
*பிறகு Profile Settings-க்குள் சென்று லிங் ஆதார் (Link Aadhaar) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
*உங்களின் பான் கார்ட் தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.
*அதனை சரிபார்த்த பிறகு உங்களின் ஆதார் எண்ணை உள்ளீடாக கொடுத்து Link Now என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
*பிறகு ஆதாருடன் பான் இணைக்கப்பட்டதை உறுதி செய்யும் செய்தி notification வரும்.