தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் தமிழக அரசு உத்தரவு
நாடெங்கும் கொரோனா அதிகமாக பரவி வரும் காரணத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு அறிவித்துள்ளது.
கல்லூரிகளில் நடைபெற்று வந்த நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு இணைய வழியில் மட்டுமே வகுப்புகளை நடத்த உத்தரவு
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு
அவை:
-------------------------------------------------------------------
செய்திவெளியீடு எண்:198
நாள்: 22.03.2021
செய்தி வெளியீடு
முன்னதாக, தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும், பல்கலைக்கழக துணைவேந்தர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் முதற்கட்டமாக 07.12.2020 அன்று முதுகலை இறுதி ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கான கல்லூரிகள் திறக்கவும் மற்றும் 08.02.2021 முதல் இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரிகள் திறக்கவும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிகள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டது. அவ்வாறு கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டது
தற்போது, தமிழ் நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ஈஞ்சன், இஆப, அவர்கள் இன்று (22.03.2021) உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டார் அப்போது அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், இயக்குநர், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் உயர்கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டது. கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, வரும் 23.03.2021 தேதி முதல் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மற்றும் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகளிலும் வகுப்புகள் இணைய வழி முறையில் வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறும், அறிவியல் , பொறியியல் மற்றும் பலவகைத்தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு குறிப்பாக இறுதி பருவ மாணாக்கர்களுக்கு செயல்முறை வகுப்புகள் மற்றும் செயல்முறை தேர்வுகள் 31.03.2021 க்குள் முடித்திடவும். மேலும், இந்த பருவத்திற்கான இறுதித் தேர்வுகளை இணைய வழியில் மட்டுமே நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை எண், (நிலை) 327 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் இன்று வெளியிடப்பட்டுள்ளது
முனைவர். ராஜீவ் ரஞ்சன் தலைமைச்செயலர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
-------------------------------------------------------------------