How To Study Well Tamil | 7 Tips For Study in Tamil | எளிமையாக படிப்பது எப்படி?
நீங்களே உங்களுடைய வகுப்பறையில் நன்றாக படிக்கின்றவர்களை கவனித்திருப்பீர்கள்.
அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே சில சில நடைமுறைகளை பின்பற்றி கொண்டுவருகிறார்கள்.
அவ்வாறான நடைமுறைகளை நீங்களும் பின்பற்றி கொண்டுவந்தால் உங்களுக்கும் அவர்களைப் போன்று ஒரு நல்ல அறிவும் நன்றாக படிக்கும் திறமையும் கிடைக்கும்.
எல்லாம் சரி அவர்கள் எவ்வாறான நடை முறைகளை பின்பற்றுகிறார்கள் என்று உங்களுக்கு கேள்வி எழலாம் அதைத்தான் இந்த பதிவில் சொல்லப் போகின்றேன் தயவு செய்து முழுவதுமாக வாசியுங்கள்.
01.Take Breaks (ஓய்வு)
ரெஸ்ட் எடுப்பது அனைவருக்கும் பிடித்த விஷயம் தானா! அப்போ என்னது ஓய்வு எடுத்தா நல்லா படிக்கலாமா? என்று நீங்கள் மகிழ்ச்சியாக கேப்பது எனக்கு புரிகிறது. ஆமாம் ஓய்வு உங்கள் படிக்கும் திறன் மற்றும் படித்ததை நினைவில் வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.
எவ்வளவுதான் நன்றாக படிக்கின்றவர்களாக இருந்தாலும் அவர்களால் ஒரு சில மணி நேரத்துக்கு மேலாக படிப்பதற்கு முடியாது.
பள்ளிகளில் வகுப்புகளில் ஒரு பாட வேளை 45 நிமிடங்கள் நடைபெறும். அதை ஏன் என்று கேட்ட பொழுது விஞ்ஞானரீதியாக விஞ்ஞானிகள் சிலவற்றை முன்வைக்கின்றார்கள் அது என்னவென்றால்.
ஒரு மனிதனுடைய மூளையானது ஒரு விசியத்தினை 45 நிமிடத்திற்கு மேலாக கவனிக்காது என்று கூறுகின்றார்கள்.
அப்படி இருக்கின்ற பொழுது படிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவே இருக்காது.
அதனால் தான் 45 நிமிட பாட வேளை வைக்கின்றார்கள்.
எல்லாம் சரி நான் இப்ப என்ன செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என்றால் நீங்கள் எப்படியாவது 45 நிமிடங்கள் ஆவது படியுங்கள் படித்தபின் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் நன்றாக படிக்கின்ற உங்களுடைய நண்பனையும் அல்லது நண்பியையோ நீங்கள் கேட்டுப் பாருங்கள் அவர்கள் தொடர்ந்து படிக்க மாட்டார்கள்.
02. Use a Keyword To Refocuse Yourself.
என்னடா இது ஆங்கிலத்தில் தான் இருக்கு என்று குழம்பாதீர்கள் இதனை தமிழில் விளக்கமாகக் கூறுகின்றேன்.
அது என்னவென்றால்: நீங்கள் ஒரு வசனத்தை மனப்பாடமாக்க வேண்டும் என்றால் அந்த வசனத்தை அவ்வாறே மனப்பாடம் ஆக்குவது கடினம்.
அப்படி பாடம் ஆக்கினாலும் அது உங்களுக்கு மறந்து போயிடும் அப்படி என்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் சாதாரணமான விஷயம் தான், நீங்கள் படிக்கின்ற வசனங்களிலிருந்து ஒரு Keyword எடுத்து வையுங்கள்.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால்,
நீங்கள் இப்பொழுது வானவில்லில் இருக்கும் கலர்களை மனப்பாடமாக்கிறீர்கள் என்றால் அது மனபாடமாக்குவது கடினமாக இருக்கும் ஆனால் நான் சொல்லும் முறையை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு இலகுவாகும். எவ்வாறென்றால், "VIBGYOR"
என்ன இது என்று கேட்காமல் கீழிருக்கும் படத்தை பாருங்கள் உங்களுக்கு புரிந்துவிடும்.
ஆகவே இவ்வாறு உங்களுடைய படிக்கும் முறையினை மாற்றிக்கொண்டு இதனை நீங்கள் பின்பற்றி வந்தால் உங்களுக்கு இலகுவாக மனப்பாடம் செய்யக் கூடிய திறமை வந்துவிடும்.
03.Take Good Notes In Class
இது என்னவென்று கேட்டீர்கள் என்றால் நீங்கள் வகுப்பறையில் இருக்கின்ற பொழுது குறிப்பெடுத்துக் கொள்ளும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பு எடுப்பதென்பது ஆசிரியர் வகுப்பறையில் படிப்பிக்கும் அத்தனை விடயங்களையும் எடுத்துக்கொள்வது என்றல்ல உங்களுக்கு புரிந்த முறையில் மிக மிக சுருக்கி குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இது உண்மையில் ஒரு நல்ல பழக்கம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதையெல்லாமா விஞ்ஞானிகள் சொல்லுகிறார் என்று கேட்டால்? ஆமா ஏன் அப்படி என்றால் நீங்கள் உங்களுக்கு புரிந்த விடயங்களை புரிந்த மாதிரி எழுதி வருகின்ற பொழுது அதாவது குறிப்பு எடுத்து வைக்கின்ற போது அந்த குறிப்பினை நீங்கள் எப்பொழுது இடத்தைப் பார்த்தாலும் உங்களுக்கு அந்த நோட்ஸ் என்ன என்பது புரிந்துவிடும்.
04.Rewrite Your Notes at Home.
இது என்ன என்று கேடடால் நான் மேலே உங்களுக்கு கூறியிருப்பேன் உங்களுக்கு புரிந்த விடயங்களை உங்களுக்கு புரிகின்ற வசனங்களைக் கொண்டு ஒரு குறிப்பு எடுக்க சொல்லி, அந்த குறிப்பினை உங்களுடைய வீட்டில் வந்து ஒரு பெரிய நோட்ஸ்ஆக எழுதி பழகுங்கள் அப்படி எழுதிக்கொள்வது மிகவும் பயனுள்ளது.
05. Make Things Interesting.
இது என்னவென்று கேட்டீர்கள் என்றால் இன்னொரு விடயத்தினை படிக்க முன்பதாக இது கஷ்டம் படிப்பது கடினம் என்றெல்லாம் யோசிக்கவே வேண்டாம். அதற்கு மாறாக இது மிகவும் இலகுவான ஒரு பாடம்தான் என்னால் படிக்க முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நீங்கள் படிக்கின்ற விடயங்கள் உங்களுக்கு மனதிலும் இருக்கும் படிப்பதற்கு இலகுவாகவும் இருக்கும்.
இந்த உலகத்தில் உங்களை விட யாரும் புத்திசாலி இல்லை என்பதை நீங்கள் நம்புங்கள் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ஆகவே ஒரு விடயத்தினை நீங்கள் படிக்க தொடங்குகின்ற பொழுது அந்தப் பாடம் என்னால் புரிந்துகொள்ள முடியும் எனக்கு அது இலகுவானது என்பதை நீங்கள் நம்புங்கள் அந்த பாடத்தின் மீது 100 வீத ஈடுபாடுடன் படியுங்கள்.
06.Study Hard Subject First.
உங்களுக்கு சில பாடங்கள் படிப்பதை கடினமாக இருக்கும் உதாரணமாக கணித பாடத்தை எடுத்துக்கொண்டால் அதில் சில கணக்குகள் செய்வது கடினமாக இருக்கும் ஆகவே நீங்கள் படிக்க ஆரம்பிக்கின்ற பொழுது அவரது கடினமாக நினைக்கின்ற பாடங்களை முதலில் அடுத்து படியுங்கள் அவர் படித்த பாடம் உங்களுக்கு புரியும்.
07.Make a Study Group.
நீங்கள் படிக்கின்ற பொழுது தனிமையில் இருந்து படிப்பதைவிட உங்கள் நண்பருடன் சேர்ந்து படிப்பது என்பது உண்மையில் நல்லம். அது என்னுடைய அனுபவத்தில் கூறுகிறேன் நானும் அவ்வாறு நான் ஒரு பயனை அடைந்திருக்கின்றேன்.
நீங்கள் தனியாக இருந்து படிப்பதைவிட உங்களுடைய நண்பர்களுடன் படிக்கின்ற பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு சந்தேகம் வந்தால் உடனே அவர்கள் அதனை தீர்த்து வைப்பார்கள் அந்த குழுவில் இருந்து யாராவது ஒருவர் உங்களுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பார்.
இதில் நான் சொன்ன விடயங்களை கடைப்பிடித்துக் கொண்டு வாருங்கள் நீங்களும் புத்திசாலியாக மாறுவீர்கள் இது நூற்றுக்கு நூறுவீதம் உண்மை.
(இந்தப் பதிவின் மூலம் நீங்கள் பயன் பெற்றது போல் உங்களுடைய நண்பனும் பயன்பெற வேண்டும் உங்களுடைய நோன்பையும் பயன்பெற வேண்டும் என்றால் இரண்டு பேருக்கு ஷேர் செய்யுங்கள் மறக்காமல் கமண்ட் பண்ணுங்கள்)
வாழ்த்துக்கள்